
லக்னோ: உ.பி. தலைநகர் லக்னோவில் தூய்மை கங்கை மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் துறையின் மறு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை வகித்துப் பேசியதாவது:
உ.பி.யில் 1.28 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும் வகையில் பருவகால ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே 6,448 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.