
ஹைதராபாத்: தெலங்கானாவில் தசரா பண்டிகையை கொண்டாட மாமியார் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து அளிக்கப்பட்டது. அதோடு மருமகனுக்கு ஒரு சவரன் நகை பரிசாக வழங்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவருக்கும் வாரங்கலை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு நவராத்திரி பண்டிகை வந்ததால் புதுமண தம்பதியினர் கொத்தகோட்டாவிற்கு வரும்படி பெண் வீட்டார் அழைப்பு விடுத்தனர். இதையேற்று சுரேஷும் சிந்துவும் கொத்தகோட்டாவுக்கு சென்றனர்.