
கொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் கடந்த 1989-ம் ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் விடில்லா கிளையில் ரூ.39,000-ஐ நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் பீட்டரின் மகன் ஜார்ஜ் என்பவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தனது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி ஆவணம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து தனது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி பணத்தை கேட்டுள்ளார்.