
மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை வனப்பகுதியில் வழி தவறி சிக்கி தவித்த 36 பக்தர்களை வனத்துறையினர் மற்றும் போலீஸார் மீட்டனர்.
மேட்டூர் அருகே பாலமலையில் சித்தேஸ்வரன் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனப்பகுதி வழியாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்போது, பக்தர்கள் நடந்து செல்லும் பாதை குறுகலாகவும், அடர்ந்த வனப்பகுதியாகவும் உள்ளது.