
ஜெய்ப்பூர்: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகள் இருமல் மருந்துகளால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அரசு வழங்கிய மருந்துகளால் உயிரிழக்கவில்லை என்றும் ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்ஸ்வர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கின்ஸ்வர், “இறந்த குழந்தைகள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். அரசு வழங்கிய மருந்துகளை உட்கொண்ட பிறகு இறக்கவில்லை. இருமல் மருந்துகளால் எந்தக் குழந்தையும் இறக்கவில்லை. ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் , மற்றொருவருக்கு சுவாச தொற்று பிரச்சினை இருந்தது. குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு அதில் பிரச்சினையில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.