
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன்முறையாக தவெக கரூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஏற்கெனவே, உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை கரூர் மாவட்ட நிர்வாகிகள் சேகரித்து, அந்தப் பட்டியலை தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களை விஜய் உத்தரவின் பேரில் தவெகவினர் நேரில் சந்தித்து வருகின்றனர்.