• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விஜய் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது சரியானது கிடையாது. விஜய்யும் இந்நேரம் வெளியே வந்து இருக்க வேண்டும். காவல்துறை கைதுக்கெல்லாம் பயந்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுவாக ஒருநபர் ஆணையங்கள் ஆளும் கட்சியின் வழிகாட்டுதலின் படிதான் அறிக்கை கொடுக்கும். கரூரில் 41 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய சோக சம்பவம். எனவே இதற்கு ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு போன்றவை உண்மையை வெளிக்கொண்டு வர உதவாது. அஸ்ரா கார்க் நேர்மையானவராக இருந்தாலும், அவர் தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது காவல்துறைக்கு எதிராகவோ அறிக்கை கொடுக்க முடியும் என நான் நம்பவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *