
சென்னை: “பாஜகவின் ‘சி டீம்’ தான் தவெக தலைவர் விஜய். அவரைக் காப்பாற்றும் எண்ணம் திமுகவுக்கு இல்லை. யாரையும் அநாவசியமாக கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை என்றைக்கும் தலைகுனிய விடவில்லை. யார் தலைகுனியவிட்டார்கள் என்பது நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த வார்த்தைகளை பார்த்தால் தெரியும்.