
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “கடந்த மே மாதம் இந்தியாவுடன் ஏற்பட்ட போரின்போது 7 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்’’ என்று தெரிவித்தார்.