
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார் பாட்னாவில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவ. 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று பிஹார் தலைநகர் பாட்னா செல்கின்றனர்.