
சென்னை: தமிழக கோயில்களிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 48 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த 2 பெண்கள் உட்பட 89 மாணவர்கள், மூன்றாண்டு பயிற்சி முடித்த 12 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்கள் என 108 பேருக்கு அதற்கான சான்றிதழை அறநிலையத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார்.