
புதுடெல்லி: காசோலையை வங்கிகளில் டெபாசிட் செய்தால் இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்கும் வசதியை வங்கிகள் இன்று முதல் அமல்படுத்த உள்ளன.
விரைவான மற்றும் பாதுகாப்பான பணம் செலுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட தீர்வு கட்டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து எச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் வங்கிகள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்றுவதற்கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் (அக்.4) தொடங்குவதாக அறிவித்துள்ளன.