
கரூர்: கரூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவரா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கேள்வி எழுப்பினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் எம்.ஏ.பேபி மற்றும் எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன், சச்சிதானந்தம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, எம்எல்ஏ நாகை மாலி கொண்ட குழுவினர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.