
ஸ்ரீகங்காநகர்: அடுத்த முறை பாகிஸ்தானுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள இந்த முகாமை ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். பிஎஸ்எப், ராஜஸ்தான் ரைபிள்ஸ் படைகளை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்கள் ஆபரேஷன் சிந்தூரின்போது உலகத்துக்கு தெரியவந்தது. இதன்மூலம் பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலமானது.