• October 4, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: ​திருச்சி அருகே ராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்​தாம் தமிழ்ச் சங்க நிர்​வாகி​களை கண்​டித்து இந்து அமைப்​பினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதையடுத்​து, அந்த அமைப்​பின் நிர்​வாகி​கள் 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர் அரு​கே​யுள்ள அயன்​புத்​தூர் கிராமத்​தில் ஐந்​தாம் தமிழ்ச் சங்​கம் என்ற அமைப்பு சார்​பில் கடந்த 28-ம் தேதி இரவு ஆசிவக திரு​மால் வழி​காட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதில், அந்த அமைப்​பின் நிர்​வாகி​கள் 6 பேர் ராமர் படம் பொறிக்​கப்​பட்ட பிளக்ஸ் பேனரை அவம​தித்​ததுடன், தீ வைத்​துக் கொளுத்​தி​யுள்​ளனர். மேலும், ராமரை இழி​வாகப் பேசி​யதுடன், ராவணனைப் போற்​றும் வகை​யில் பேசி​யுள்​ளனர். அதை வீடியோ​வாக எடுத்து சமூக வலைதளங்​களில் பதிவேற்​றம் செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *