• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் தவெக தலை​வர் விஜய் மீது வழக்கு பதிவு செய்​யாதது ஏன் என்று அரசுத் தரப்​புக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பியது. உயி​ரிழப்பு நேரிட்ட நிலை​யில், கட்​சித் தொண்​டர்​களை பொறுப்​பற்ற முறை​யில் கைவிட்​டு​விட்டு விஜய் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் ஓடி​யுள்​ள​தாக நீதிபதி கடும் கண்​டனம் தெரி​வித்​தார்.

கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இதை தொடர்ந்​து, அரசி​யல் கட்​சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வில்​லி​வாக்​கத்தை சேர்ந்த பி.ஹெச்​.​தினேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *