• October 3, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: “கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமான தவெக தலைவர் விஜய் பொது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். விஜய்யை இதுவரை ஏன் காவல் துறை கைது செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளதில் நியாயம் உள்ளது. கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் தலையிடுகிறார்கள் என்பதற்காக யாரையும் தப்பிக்க விட்டுவிடக் கூடாது. தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *