• October 3, 2025
  • NewsEditor
  • 0

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது அதன் ப்ரீக்வலாக `காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் நேற்று( அக்.2) வெளியானது.

ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் ஆகியோரும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

Kantara Chapter 1

`காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘2016-ல் ஒரு ஈவினிங் ஷோவைப் பெறுவதற்கு போராடிக்கொண்டிருந்தேன்.

ஆனால் 2025-ல் 5000-க்கும் மேற்பட்ட ஹவுஸ்‌ஃபுல் காட்சிகளை அடைந்திருக்கிறோம்.

இந்தப் பயணம் உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் இறைவன் அருளால் மட்டுமே சாத்தியமானது.

Kantara Chapter 1
Kantara Chapter 1

இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

காந்தாராவிற்கு முன் ரிஷப் ஷெட்டி, (ரிக்கி)– 2016, கிரிக் பார்ட்டி(2016) சர்காரி ஹி. ப்ரா. சாலே, காசரகோடு, கொடுகே: ராமண்ணா ராய் (2018) போன்ற படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *