
புதுடெல்லி: புல்லட் ரயில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்ள சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் சீனா மற்றும் ஜெர்மனியிடம் இருந்து சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜெர்மனியின் ஹெர்ரென்க்நெக்ட் நிறுவனத்திடம் இருந்து அதிக இயந்திரங்கள் வாங்கப்படுகின்றன.
ஜெர்மனியின் ஹெர்ரென்க்நெக்ட் நிறுவனத்துக்கு சீனாவின் குவாங்சூ, வூஹான், செங்டூ ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.