புதுடெல்லி: குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவின் பிறந்த நாளையொட்டி சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. என்றாலும் இந்த அனுமதி, தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு மட்டுமே பொருந்தும். தகுதி வாய்ந்த பக்தர்களை பஞ்சாப் மாநில அரசு பரிந்துரை செய்யும். மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு அனுமதி வழங்கும்.