
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தடுத்து வைத்துக் கொண்டு, கல்வியை அரசியல் செய்வதாக தெலுங்கான முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கத்தில் இருந்து கோவூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பரிசுகளை வழங்கி பேசியதாவது: பிரதமர் மோடி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நாட்டிற்குச் சமர்ப்பித்துள்ளார்.