• October 3, 2025
  • NewsEditor
  • 0

திரு​வள்​ளூர்: எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, உயி​ரிழந்த 9 தொழிலா​ளர்​களின் உடல்கள் அவர்​களின் சொந்த மாநில​மான அசா​முக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்​கப்​பட்​டது. விபத்து தொடர்​பாக தனி​யார் ஒப்​பந்த நிறுவன உரிமை​யாளர் உட்பட 4 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், மீஞ்​சூர் அருகே உள்ள வாயலூரில், 1,320 மெகா வாட் மின் உற்​பத்தி செய்​யும் வகை​யில், ரூ. 9,800 கோடி மதிப்​பில் எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்​டு​மான பணி​கள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடை​பெற்று வரு​கிறது. ‘பெல்’ நிறு​வனம் மூலம் நடை​பெற்று வரும் இந்த கட்​டு​மான பணி​யில், பல்​வேறு தனி​யார் ஒப்​பந்த நிறு​வனங்​கள் மூலம் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலா​ளர்​கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *