• October 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பொருளா​தார விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை குழு (சிசிஇஏ) கூட்​டம் டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறுகை​யில், “நாட்​டின் 17 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் புதி​தாக 57 கேந்​திர வித்​யால​யா பள்ளி​களை திறக்க சிசிஇஏ ஒப்புதல் அளித்​துள்​ளது.

இதன் மூலம் 86,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பயன் அடை​வார்​கள். மேலும் இதனால் 4,600-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உரு​வாகும். இதற்​காக 9 ஆண்​டு​களில் சுமார் ரூ.5,863 கோடி ஒதுக்​கப்​படும். இதில் ரூ.2,586 கோடி மூலதனச் செலவாகவும் ரூ.3,277 கோடி செயல்​பாட்​டுச் செல​வாகவும் இருக்​கும்” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *