• October 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் சிறப்​பாக செயல்​பட்ட 5 போலீ​ஸாருக்கு ‘காந்​தி​யடிகள் காவலர்’ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் பாராட்​டத்​தக்க வகை​யில் பணி​யாற்​றியதற்​காக விழுப்​புரம் மண்​டலம், மத்​திய நுண்​ணறி​வு பிரிவு காவல் ஆய்​வாளர் ப.நட​ராஜன், விழுப்​புரம் மாவட்​டம், ஆரோ​வில் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் மா.சத்​யாநந்​தன், கள்​ளக்​குறிச்சி மாவட்​டம், சின்ன சேலம் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் சு.மணி​கண்​டன், கடலூர் மாவட்​டம், புத்​தூர் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் க.நட​ராஜன் மற்​றும் சேலம் மாவட்​டம், மத்​திய நுண்​ணறி​வுப் பிரிவு தலை​மைக் காவலர் வா.பெ.கண்​ணன் ஆகிய 5 பேருக்கு 2025-ம் ஆண்​டுக்​கான ‘காந்​தி​யடிகள் காவலர்’ விருது வழங்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இவ்​விருது, முதல்​வ​ரால் 2026-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி குடியரசு தினத்​தன்று வழங்​கப்​படும். இவ்​விருதுடன், பரிசுத் தொகை​யாக ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.40 ஆயிரம் வழங்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *