• October 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், தெற்கு ஒடி​சா, வடக்கு ஆந்​திரா இடையே நேற்று இரவு கரையை கடந்​தது. இதன் தாக்​கம் காரண​மாக தமிழகத்​தில் இன்று (அக்​.3) முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, சேலம் மாவட்​டங்​களி​லும்.நாளை திரு​வள்​ளூர், சென்​னை,செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், ராணிப்பேட்​டை, வேலூர் மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டங்​களி​லும், வரும் 5-ம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்​கை, தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *