
புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை அக்டோபர் 26-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா – சீனா இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்தனர்.இதன்காரணமாக, இரு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.