
ஊட்டி: கரூர் சம்பவத்தில் சில கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றனர். இது அரசியல் பிழை என ஊட்டியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
‘வாக்கு திருட்டை’ கண்டித்து இந்தியா முழுவதிலும், காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதிலுமே தற்போது கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 6 கோடி கையெழுத்துக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டு இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊட்டியில் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று தொடங்கி வைத்தார்.