• October 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாதம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா வருவதாகவும், அப்போது புதினின் பயணம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத் திட்டத்தின்படி ரஷ்ய அதிபர் புதின், இந்தியா வரும்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு இருதரப்புக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *