
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் இருந்த 19 நிமிடத்தில் 10 நிமிடம் பேசி பேரிழப்பை உண்டாக்கி உள்ளார் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும், ரூ.10 விவகாரம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று மதியம் 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த செப்.27-ம் தேதி கரூரில் நடந்த சம்பவம் துயரமானது. நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவம் நிகழ்ந்துள்ளது.