
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்தும், தவெக தரப்பிலும், விஜய் தரப்பிலும் எழுப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வீடியோக்களை பகிர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் திரண்டது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடு அற்ற கூட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
41 உயிர்கள் பறிபோன கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியது: “கரூரில் மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் முதலில் 116 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதில் 108 பேர் சிகிச்சைகளுக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5 பேர் கரூர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.