
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் 3-ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை ரூ.8,428.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலத்தடி நீரில் காணப்படும் புளோரைடு தாக்கம் அந்த நீரை பருகுவோரின் உடலில் எலும்பு, பல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் இரு மாவட்ட மக்களில் பலர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில், புளோரைடு பாதிப்புக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு குறைப்புத் திட்டம் (முதல் மற்றும் இரண்டாம் கட்டம்) கடந்த 2008-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் தருமபுரியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.