
சென்னை: தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசுத் துறை சார்ந்த 12 ஆயிரம் வாகனங்களுக்கான பதிவுச் சான்று செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 1-ம் தேதிக்கு பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களைப் பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தடை விதித்தது. இத்தகைய வாகனங்களுக்கான பதிவுச் சான்றை வாகன இணையதளம் வாயிலாக ரத்து செய்தும் அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது.