
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் தி.நகர், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.164.92 கோடியில் இரும்பினால் கட்டப்பட்ட ஜெ.அன்பழகன் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் உயரிய தொழில்நுட்பத்துடன் தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 3,800 டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு ரூ.164.92 கோடி செலவில் முதல் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.