• October 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​மும்பை தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானுக்கு எதி​ராக போரை தொடங்க வேண்​டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடு​கள் தடுத்​த​தாக முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் கூறி​னார். காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய முற்போக்கு கூட்​டணி ஆட்​சி​யில், கடந்த 2008, நவம்​பர் 26-ம் தேதி மும்​பை​யின் முக்​கிய இடங்​களில் பாகிஸ்​தானை சேர்ந்த லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வா​தி​கள் கொடூர தாக்​குதல் நடத்​தினர்.

இதில் 166 பேர் உயி​ரிழந்​தனர். 300-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இதன் பிறகு மத்​திய உள்​துறை அமைச்​ச​ராக இருந்த சிவ​ராஜ் பாட்​டீல் பதவி வில​கி​னார். அப்​போதைய நிதி அமைச்​சர் ப.சிதம்​பரம் உள்​துறை அமைச்​ச​ராக பொறுப்​பேற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *