
புதுடெல்லி: மும்பை தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையின் முக்கிய இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்.
இதில் 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.