
சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பிரச்சாரத்தின்போது அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி என்பது தொடர்பாக தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அமுதா, சுகாதாரத் துறைச் செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் வீடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக விஜய் சில கருத்து களை வீடியோவில் தெரிவித்திருந்தார்.