
கரூர்: தவெக மாநாட்டில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை கைது செய்து கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து எஸ்.பி. கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் உள்ளிட்டோர் விடிய, விடிய 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
மேலும் தவெகவைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டு அவரும் கரூர் நகர காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.