
சென்னை: கரூர் துயரச் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக,நேற்று முதல்வர் ஸ்டாலின் ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். அதில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான காணொலிகள் பரவி வருகின்றன. இதில் போலியான, ஜோடிக்கப்பட்ட காணொலிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.