
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து இன்று (30-ம் தேதி) இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்பட்டு, நாளை மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து அக்.5-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.