
புதுடெல்லி: காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் திட்டத்தை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒருங்கிணைந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது, பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும், மேற்காசிய பிராந்தியத்துக்கும் நீடித்த நிலையான அமைதியை, பாதுகாப்பை, வளர்ச்சிக்கான பாதையை வழங்குகிறது.