
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட பழனிசாமிதான், கரூர் சம்பவத்தில் துரிதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மீது பழிபோடுகிறார் என்று அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை: கரூர் துயரச் சம்பவத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அதிலும் அரசியல் செய்து வருகிறார். காவல்துறையின் கட்டுப்பாடுகள் எதையும் தவெக பிரச்சாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. ‘ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக செல்வார்’ என பழனிசாமி சொன்னதன் விளைவே தவெக கூட்டத்திலும் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.