• September 30, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தவெக வழக்​கறிஞர் அறிவழகன் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தவெக தலை​வர் விஜய் கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​ட​போது போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீர்​செய்​ய​வில்​லை. பாது​காப்​புக்கு போது​மான காவலர்​களை நியமிக்​க​வும் இல்​லை. கரூர் கூட்​டத்​தில் போலீ​ஸார் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளனர்.

திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​ பாலாஜி சதி​யால் 41 பேர் உயி​ரிழந்​தனர். அதற்​கான ஆதா​ரங்​களை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​வோம். உயர் நீதி​மன்​றம் அனு​மதி அளித்​தால், பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களை சந்​தித்து ஆறு​தல் கூற விஜய் தயா​ராக உள்​ளார். ஒரு நபர் விசா​ரணை ஆணை​யம் என்​பது பாதிக்​கப்​பட்ட மக்​களின் பிரச்​சினை​களை கேட்​கும். புலன் விசா​ரணை நடத்த முடி​யாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *