• September 30, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: திண்​டிவனத்​தில் உள்ள அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்தை தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கடந்த வாரம் சந்​தித்​தார். இந்​நிலை​யில், தைலாபுரத்​துக்கு முன்​னாள் அமைச்​சர் சி.​வி. சண்​முகம் நேற்று சென்​று, பாமக நிறு​வனர் ராம​தாஸிடம், தனது குடும்​பத்​தில் நடை​பெறும் திரு​மணத்​துக்​கான அழைப்​பைக் கொடுத்​தார். பின்​னர் இரு​வரும் சிறிது நேரம் ஆலோ​சனை நடத்​தினர்.

இதுகுறித்து பாமக தரப்​பில் கேட்​ட​போது, “தமிழகத்​தின் அரசி​யல் கள நில​வரம் குறித்து இரு​வரும் ஆலோ​சனை நடத்​தினர். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாமக இடம் பெற வேண்​டும் என்ற அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் விருப்​பத்தை சி.​வி.சண்​முகம் முன்​வைத்​திருக்​கிறார்” என்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *