• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக தவெக தலைவர் விஜய்யிடம், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொலைபேசி மூலம் பேசினார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிக்க காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய்யிடம் தொலைபேசியில் பேசியது தொடர்பாக அக்கட்சி வட்டாரம், "எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய்யை அழைத்து இரங்கல் தெரிவித்தார்" என்று தெரிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *