
சென்னை: “ஓபிஎஸ் தலைமையில் புதிய அமைச்சரவையில் கண்ணீரோடு பதவியேற்ற உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள்” என கரூர் துயரத்திற்கு முதல்வர் வெளியிட்ட வீடியோவை பார்த்து விட்டுக் கதறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. நாம் முதல்வராக இருந்தபோது தொலைக்காட்சியைப் பார்த்துத் தானே ஆட்சி செய்தோம். இப்போது இருக்கிற முதல்வர் நேரில் போகிறாரே என்ற விரக்தியில், இயலாமையில் உளற ஆரம்பித்திருக்கிறார்.