
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரூரில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. மதுரையில் இந்து முன்னணி மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர். கீழே சின்ன குப்பை பாக்கெட் கூட விழுந்தது கிடையாது. இந்து முன்னணி தொண்டர்கள் நாற்காலிகளை எல்லாம் ஒழுங்குபடுத்தினர். இந்த மாதிரி கட்டுப்பாடுகளை வைத்து கட்சியை வளர்த்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. தவறு தான்.