• September 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “ல​டாக்​கில் ஏற்​பட்ட வன்​முறை, 4 பேர் உயி​ரிழப்​புக்கு மத்​தி​யில் ஆளும் பாஜக.​வும், ஆர்​எஸ்​எஸ் அமைப்​பும்​தான் காரணம்’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். காஷ்மீரில் இருந்து பிரித்து தனி யூனியன் பிரதேச​மாக லடாக் அறிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் மாநில அந்​தஸ்து வழங்க கோரி சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தி​னார்.

கடந்த வாரம் அங்கு இளைஞர்​கள் திடீரென போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அது கலவர​மாக மாறிய​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து வாங்​சுக் உண்​ணா​விரதத்தை வாபஸ் பெற்​று, வன்​முறைக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அதன்​பின், வாங்​சுக் நடத்​தி வரும் என்​ஜிஓ அமைப்​புக்கு சட்​ட​விரோத​மாக வெளி​நாட்​டில் இருந்து பணம் வந்​தது, அவர் பாகிஸ்​தான் சென்று வந்​தது குறித்து சிபிஐ விசா​ரணை தொடங்​கியது. மேலும், கடந்த வெள்​ளிக்​கிழமை வாங்​சுக்​கை போலீ​ஸார் கைது செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *