
புதுடெல்லி: டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அறிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி, மனிதாபிமான உதவி, சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர்தொழில்நுட்ப துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்கள் இந்த சந்திப்பின்போது முன்னெடுக்கப்படும்.