
சென்னை: கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம் என்றும், பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.