
கரூர்: கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூரில் நேற்று முன்தினம் இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 40 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து காரில் கரூர் சென்றார்.