
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் மீ.தங்கவேல், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ஆட்சியர் மீ.தங்கவேல் கூறும்போது, “கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேரும் சடலமாகத்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மயங்கி விழுந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.